உலகம்
2023 புத்தாண்டில் கனேடிய நகரத்தில் பிறந்த முதல் குழந்தை! பெற்றோர் தமிழ் தம்பதி.. புகைப்படம்

2023 புத்தாண்டில் கனேடிய நகரத்தில் பிறந்த முதல் குழந்தை! பெற்றோர் தமிழ் தம்பதி.. புகைப்படம்
கனடாவில் ரொறன்ரோவில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனை 2023 ஆம் ஆண்டின் முதல் குழந்தைகளை வரவேற்றுள்ளது.அதன்படி சஞ்சித் என்ற குழந்தை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:01 மணிக்கு ரொறன்ரோவில் பிறந்தது, இது 2023 இல் பிரசவிக்கப்படும் நகரத்தின் முதல் குழந்தைகளில் ஒன்றாகும்.
சஞ்சித் தமிழ் தம்பதிக்கு பிறந்துள்ள குழந்தை என்பது கூடுதல் தகவலாகும். North York பொது மருத்துவமனையில் தமிழரான மதியழகன் மற்றும் அவர் மனைவிக்கு தான் சஞ்சித் பிறந்துள்ளான்.
குடும்பத்தினருக்கு வாழ்த்து
North York பொது மருத்துவமனை புத்தாண்டு தினத்தன்று வெளியிட்ட செய்தி வெளியீட்டில் மதியழகன் குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.